பலவகை எண்ணங்களை
பகிர்ந்திட நினைக்கிறேன்
முடியவில்லை...
முள்ளாய் குத்துகின்றன
இறந்தகால நினைவுகள்.
இறந்தகால நினைவுகளுடன்
இறந்திட எண்ணுகின்றேன்-ஆனால்
இயற்கையிலே என்விதியை
இறைவன் எழுதிவிட்டான்
பிணமாய் வாழ்ந்திட..!!!
உண்மை பாசத்தினை
உரிமையுடன் பலர் தந்தும்
ஊனமுற்றவளாய் என் உள்மனம்
ஊழையிடுவது யாருக்கு புரிந்திடும்...!
அன்று
போலியான அவன் பாசத்தினை
நிஜமென நம்பியதால்
இன்று
தனிமையில் தவிக்கின்றேன்
கண்ணீரில் மிதக்கின்றேன்..ஃ!
❤❤❤ப்ரித்திவிதுசன்❤❤❤
No comments:
Post a Comment